கர்த்தர் உன்னை மறுபடியும் பிடித்துக்கொள்வாராக!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கர்த்தர் உன்னை மறுபடியும் பிடித்துக்கொள்வாராக!

என் வாழ்க்கையில் நான் என்னைக் குறித்து மிகவும் வெட்கப்பட்டு, ஒரு பதுங்கு குழிக்குள் ஊர்ந்து சென்று ஆண்டவரின் பார்வையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று விரும்பிய  காலங்கள்  உண்டு. 

பிரெஞ்சு நாவலாசிரியரான ஆண்ட்ரே மால்ராக்ஸ் என்பவர் இதை என்னை விட சிறப்பாகக் கூறியிருக்கிறார்: “ஆண்டவரிடமிருந்து ஒருவராலும் தப்பிக்க முடியாது.” 

அது முடியாத காரியம். நாம் ஆண்டவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது… அவர் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும்,  நித்தியமானவராக இருக்கிறார்.

நம்மால் தேவனிடமிருந்து தப்பிக்க முடியாவிட்டால் அது நல்லதுதான். ஆம், எப்பொழுதும் அது நல்லதுதான்!

ஆண்டவர் நம் பாவங்களை ஒருபோதும் நினைவுகூரமாட்டார் என்று வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 8:12). எனவே, அவர் நம்மைப் “பிடித்தால்”, அது நம்மைத் திட்டுவதற்காகவோ அல்லது தண்டிப்பதற்காகவோ அல்ல. மாறாக, அவருடைய கரங்களில் நம்மை  சேர்த்தணைத்து, அவரை நமக்கு வெளிப்படுத்துவதற்காகத்தான். அவர் நம்மிடம்  நெருங்கிவரவே விரும்புகிறார். (வேதாகமத்தில், யாக்கோபு 4:8ஐ வாசித்துப் பார்க்கவும்)

ஆண்டவர் இன்று மீண்டும் உனக்கு அருகில் நெருங்கிவர விரும்புகிறார்… எத்தனை அருமையான ஒரு நல்ல செய்தி இது! அவர் உன்னை மீண்டும் பிடித்துக்கொள்ளட்டும்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!