ஆண்டவர் மறைத்து வைத்திருக்கும் செய்தி என்று ஏதாவது இருக்கிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் மறைத்து வைத்திருக்கும் செய்தி என்று ஏதாவது இருக்கிறதா?

பவுல் தன் துன்பம் சாத்தானால் அனுப்பப்பட்டதாகக் கருதினதை நீ கவனித்தாயா? இருப்பினும், இந்த முள் கூட ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது… இது பவுலின் வாழ்க்கையில் தேவன் தன்னை இன்னும் அசாதாரணமான முறையில் வெளிப்படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது.

ஒருவேளை, இந்த வேதனையை ஆண்டவர் உங்களுக்கு அனுமதித்து, அதில் ஒரு அற்புதமான செய்தியை மறைத்து வைத்திருக்கக் கூடுமோ?

உதாரணமாக, உன் சூழ்நிலைகளை எடுத்துக்கொள்… வியாதி, கீழ்ப்படியாத பிள்ளை, குடும்ப உறவுகளில் பிரச்சனைகள், உடல் அல்லது மன அளவிலான காயம்… இவைகளுக்கு மத்தியில் ஆண்டவர் இருக்கிறார்.

அவர் இந்தக் கடிதத்தில் தம் அன்பின் வார்த்தையை உனக்கு அளிக்கிறார்; இது மனதுருக்கத்தால் நிறைந்த ஒரு வார்த்தை, இது மாறாத வாக்குத்தத்தம்… “என் கிருபை உனக்குப்போதும்!” என்பதே அது. (2 கொரிந்தியர் 12: 9)

நீ இப்போது சோதிக்கப்பட்டால், உன் மனச்சோர்வின் ஆதாரம் ஒரு கசக்கப்பட்ட, அழுக்கு தபால் உறை என்பதை நினைவில் கொள். ஆனால் உள்ளே, ஒரு தெய்வீக செய்தி இருக்கிறது, அது அன்பு நிறைந்தது மற்றும் இரக்கம் நிறைந்தது. இன்று அதைக் கண்டுபிடிக்க பரிசுத்த ஆவியானவர் உனக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!

வேதாகமம் சொல்கிறது: “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.” (ஏசாயா 35: 3-4)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!