நீ மன அழுத்தத்துடன் உன் வாழ்க்கையை வாழ வேண்டுமா? 🤔

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ மன அழுத்தத்துடன் உன் வாழ்க்கையை வாழ வேண்டுமா? 🤔

பின்டோ என்பவள் தன்னுடன் ஒருசேரப் பிறந்த சகோதரியை இழந்துவிட்டாள். வேதனை, கண்ணீர் மற்றும் துயரமான பிரிவு அவளை மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கைக்குள் மூழ்கடித்தது. தன் சகோதரி இல்லாவிட்டாலும், தனக்கு உதவி செய்து ஆறுதலளிக்கும் ஆண்டவர் தன் பக்கத்தில் எப்போதும் இருக்கிறார் என்பதையும், வாழ்க்கையை தொடர்ந்து வாழ வேண்டியது மிகவும் அவசியமானது என்பதையும் அவள் உணர வேண்டும் என்று இயேசு விரும்பினார்…

ஏதோ ஒரு வகையில், பின்டோவின் சூழலைப் போன்ற ஒரு சூழலில் நீ இருப்பதாக உணர்கிறாயா? ஆம், சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் கடினமாகத்தான் உள்ளது. சோதனைகள் மிகக் கொடூரமாக நம்மைத் தாக்குகின்றன. அதுமட்டுமின்றி, கடந்த நாட்களில் நடந்தவைகளை மனதில் வைத்துக் கொண்டு, நிகழ்காலத்தில் மன உளைச்சலிலேயே வாழ்ந்து பின்வாங்கிப் போகிற ஆபத்தான சூழலுக்குள் நாம் தள்ளப்படலாம். ஒருவேளை எதிர்காலத்தைப் பொறுத்தவரை, நாம் இருளை மட்டுமே பார்க்கக் கூடிய சூழல் தற்போது காணப்படலாம்…

சில சமயங்களில் மன உளைச்சலுக்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், அதே நிலையில் தொடர்ந்து இருப்பதாலும், மன உளைச்சலில் தொடர்ந்து வாழ்வதாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

நீ என்னிடம் இப்படியாகக் கூறலாம், “எரிக், … செய்வதை விட சொல்வது மிக எளிது! இந்த மன உளைச்சலை உணருவதற்கு எனக்கு பல சரியான காரணங்கள் இருக்கின்றன. நான் இருக்கிற இடத்தில் நீங்கள் இல்லை.”

நான் உன் இடத்திலோ அல்லது பின்டோவின் இடத்திலோ இல்லை என்பது உண்மை தான்… ஆனால், இன்னும்… விரக்தியடைந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. விரக்தி நமக்குக் கண்ணியாக இருப்பதை நான் உணர்கிறேன். இது ஒரு சிறைச்சாலை, துன்பத்தை அனுபவிக்கும் இடம். நீயும் நானும் அதற்காக உருவாக்கப்படவில்லை. வேதனை மற்றும் மன உளைச்சலை வேறுபடுத்தி அறிவது அவசியம்.

மன உளைச்சலைத் தக்கவைத்து அதை நம்முடைய வாழ்க்கையில் வளரச்செய்வது, உண்மையிலேயே ஆண்டவர் நமக்காக வைத்திருக்கிற விருப்பத்தை எதிர்க்கிறது. நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், நம்முடைய இருதயங்கள் ஆறுதலடைந்து, அனைத்து சுமைகள் மற்றும் பாரங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதனால்தான், நான் எதையாவது பாரமாக உணரும்போது, ​​நான் அதைக் கர்த்தர் மீது வைத்துவிடத் தீர்மானிக்கிறேன். ஏனென்றால், அவருடைய உதவியில்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது! சில நேரங்களில், என்னால் மட்டுமே ஏமாற்றத்தை சமாளிக்க முடியாது. அதனால் நான் ஆண்டவரிடத்திற்குத் திரும்புகிறேன். அதையே நீயும் செய்ய வேண்டும் என்று நான் உன்னை அழைக்கிறேன்…

ஆண்டவருடைய வார்த்தை கூறுகிறது, “…அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:10)

இயேசுவில், நீ பலவீனமாக இருக்கும்போதுதான் நீ பலமாக இருக்கிறாய்! ஆண்டவருக்கு முன்பாக உன் பலவீனத்தை ஒத்துக்கொள்வதன் மூலம், அவர் உனக்குள் செயல்பட அனுமதிக்கிறாய். அவர் உன்னை மன உளைச்சல் மற்றும் அதன் எதிர்மறை விளைவான, நாச மோசங்களிலிருந்து விடுவிப்பார். ஆம், ஆண்டவர் விரும்புவதெல்லாம், அவர் பின்டோவுக்கு செய்ததுபோல, உன் பாரத்தை உன்னை விட்டு நீக்கி, உன்னை விடுவிப்பதேயாகும்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!