கிறிஸ்துவில் இளைப்பாறு
முகப்பு ›› அற்புதங்கள் ››
“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” (வேதாகமத்தில் சங்கீதம் 42:1 ஐ வாசிக்கவும்)
செய்திகள், மனுஷர்கள், பருவங்கள்… என்று எல்லாமே வேகமாகவும் துரிதமாகவும் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்… மேலும் ஒவ்வொரு நாளும் நாம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் நம்மிடம் உள்ளன.
எல்லாம் மிக வேகமாக நடக்கும்போது, எந்த முடிவை எடுக்க வேண்டும், எந்த உத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், மற்றும் எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை அறிவது மிகக் கடினமாக இருக்கலாம்.
ஒரு நிமிடம் அமைதியாக நில், நிம்மதிப் பெருமூச்சுவிடு, எல்லா வகையான ஞானம் மற்றும் அறிவின் ஆதாரம் ஆண்டவர் தாமே என்று நினைத்துக்கொள். அவர் ஒருபோதும் யோசனைகளில் குறைந்தவர் அல்ல, ஒருபோதும் ஊக்குவிப்பதில் குறைவானவர் அல்ல. உன் ஆண்டவர் அற்புதமானவர், அதிசயமானவர் மற்றும் ஆச்சரியமானவர்! நிம்மதிப் பெருமூச்சுவிடு…அவர் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)