ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை நீங்கள் எப்படித் தொடங்குகிறீர்கள்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
காலை வணக்கம்! நம் அன்றாட நாளை ஆரோக்கியமாகத் தொடங்க நம்மை நாமே ஊக்குவிப்பது என்ற போக்கு இப்போது அதிகமாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக, நாம் ஆரோக்கியமாக இருக்க, அதிகாலையில் எழுந்திருத்தல், தண்ணீர் அருந்துதல், உடற்பயிற்சி செய்தல், குறிப்பிட்ட காலை உணவைச் சாப்பிடுதல், தியானம் செய்தல் அல்லது குறிப்பிட்ட முறையில் பல் துலக்குதல் போன்றவற்றை நாம் கடைப்பிடிக்கிறோம்.
உங்கள் நாளை நன்றாகத் தொடங்குதல் என்பதன் முக்கியத்துவம் ஒரு புதிய கருத்து அல்ல; உண்மையில், இது ஒரு பண்டையகால நடைமுறையும், வேதாகம நாட்களின் பழக்கவழக்கமுமாக இருக்கிறது. ஆண்டவருடன் நேரத்தை செலவிட்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது:
- “கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.” (சங்கீதம் :5:3)
- “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற்கு 1:35)
அதனால்தான், ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறோம் – உங்கள் நாளை ஆண்டவருடன் ஆரோக்கியமாகத் தொடங்க உங்களுக்கு உதவவே நாங்கள் இதைச் செய்கிறோம். ஒவ்வொரு அதிசயமும் ஒரு செயலை செய்ய உங்களைத் தூண்டும்படி முடிவடைகிறது, ஒரு பாடல், ஜெபம் அல்லது சிந்தனையில் உங்கள் இதயத்தை ஈடுபடுத்தவும், வார்த்தைகளை நடைமுறைப்படுத்தும்படியும், ஆண்டவர் உங்களில் கிரியை செய்வதற்கு நீங்கள் இடமளிக்கும்படியும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் உங்களுடன் பேச விரும்புகிறார், உங்களை மாற்ற ஏங்குகிறார், உங்கள் கவனத்தை ஈர்க்க ஆவலாய் இருக்கிறார்.
அனுதினமும் ஆண்டவருடன் உங்கள் நாளைத் தொடங்குவது உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மோசே இவ்வாறு ஜெபிக்கிறார், “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.” (சங்கீதம் 90:14)
‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிப்பது மட்டுமல்லாமல், ஆண்டவரோடு பேசும்படி சிறிது நேரம் மௌனமாகவும் தனிமையிலும் செலவிடுவதே, அந்த நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை முற்றிலும் மௌனமாக இருந்து, ஆண்டவருடைய குரலைக் கேட்க நாடி காத்திருங்கள். அமைதியான சூழல் நிலவும்படி, உங்கள் கைபேசியை அணைத்துவிடுங்கள். ஒரு வரியில் ஒரு எளிய ஜெபம்செய்யுங்கள். உதாரணமாக, “ஆண்டவரே, இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்கள் மனதை ஒருமனப்படுத்த முடியாதபோதும் (இது முற்றிலும் இயல்பானது!), இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் மெதுவாக ஆண்டவர் மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். கர்த்தருடைய ஜெபத்தை சொல்லி ஜெபத்தை நிறைவுசெய்யுங்கள். கர்த்தருடைய ஜெபம்: (மத்தேயு 6:9-13)