எல்லா வழிகளிலும் எப்போதும் சமாதானத்தை கண்டுகொள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› எல்லா வழிகளிலும் எப்போதும் சமாதானத்தை கண்டுகொள்

“சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.” (2 தெசலோனிக்கேயர் 3:16)

ஆண்டவர் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை தரக்கூடியவர் மட்டுமல்ல… சமாதானத்தின் உருவமே அவர்தான்!

அவர் சமாதானப்பிரபு என்று வேதாகமம் உறுதிப்படுத்துகிறது. அவர் நிலைத்தன்மையின் வரையறை. அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

  • உன்னை பொய்யாகக் குற்றம் சாட்டும் குரல்களின் மத்தியில், நீ சமாதானத்தைக் காண்பாய்.
  • அநீதி அல்லது அவமதிப்பை எதிர்கொண்டிருந்தால், சமாதானத்தை சுவைப்பாய்.
  • நோய்க்கு எதிரான இந்தப் போரின் ஆழத்தில், நீ சமாதானத்தை அறிவாய்.
  • உன் குடும்பத்திற்கு எதிரான இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, நீ சமாதானத்தை அனுபவிப்பாய்.

உன் வாழ்க்கை சமாதானத்தின் தேவனுக்கு சொந்தமானது என்று நீ அறிக்கையிடுவதால், அவருடைய தெய்வீக தன்மை உனக்குள் வெளிப்படுகிறது. நீ சமாதானம் நிறைந்த இதயத்தையும் மகிழ்ச்சியான ஆவியையும் பெறுவாய்.

என்னுடன் அறிக்கையிடு: “அப்பா, நீரே என் சமாதானம். இப்போது, எல்லாப் புரிதலுக்கும் மேலான உமது சமாதானத்தை நான் பெறுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!