அவருடைய அன்பை வெளிப்படுத்துவதற்காகவே நீ பிறந்தாயோ?

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவருடைய அன்பை வெளிப்படுத்துவதற்காகவே நீ பிறந்தாயோ?

படிப்படியாக, ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும், நீ வளர்ந்துகொண்டே இருக்கிறாய் மற்றும் தேவனுக்கு அருகில் நெருங்கி வருகிறாய். மற்றவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதிக்க இந்த வளர்ச்சியை அவர் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கலாம் அல்லவா?

“பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.” (ஏசாயா 6:8ஐப் பார்க்கவும்)

தேவன் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைத்து மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் உன் இருதயத்தில் உரைத்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களின் வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்க உன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதன் மூலம் நீ அவருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகிறாய்!

நீ எங்கிருந்தாலும், அந்த இடத்தில் உன்னை அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கான தூதுவராக மாற்றுவதற்கு அவர் உன் வாழ்க்கையில் தம்முடைய கிருபையையும், ஞானத்தையும், பலத்தையும் ஊற்றுகிறார்.

நீ வித்தியாசமாக இருக்கவும், வித்தியாசத்தை ஏற்படுத்தவும், உன்னைச் சுற்றிலும் அவருடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளவும் நீ அவருடைய ஆவியால் சூழப்பட்டு, அவருடைய ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிறாய்.
மற்றவர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் முன்னோக்கிச் செல்ல… இன்னும் அதிக தூரம் செல்ல உன்னை அழைக்கிறேன்!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “கர்த்தாவே, உம்மில் உள்ள என் அடையாளத்தை நான் பற்றிக்கொள்கிறேன். நான் உம்முடையவன்/உம்முடையவள், உம்மால் வடிவமைக்கப்பட்டிருக்கிறேன். நான் இன்னும் அதிகமாகக் கொடுக்கவும், என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும் நீர் என்னை அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்! உமது அன்பை வெளிப்படுத்த என்னை எடுத்து பயன்படுத்துவீராக. உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!