மன்னிப்பு இங்கே இப்போதே கிடைக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மன்னிப்பு இங்கே இப்போதே கிடைக்கிறது!

நீ குற்ற உணர்வை விட்டுவிட உனக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம், நீ அப்படிப்பட்ட உணர்வோடு இருப்பதை ஆண்டவர் விரும்புவதில்லை! இருப்பினும், இந்த உணர்வு விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நான் இன்று மன்னிப்பைப் பற்றி உன்னுடன் பேச விரும்புகிறேன், மேலும் இந்த சத்தியத்தை ஆண்டவருடைய வார்த்தையின் வாயிலாகப் பற்றிக்கொண்டு நடக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

இன்றே, இப்போதே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று நீ உறுதியாக நம்புகிறாயா?

வேதாகமத்தில் நாம் இதை வாசிக்கலாம்: “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” (ஏசாயா 43:25)

இங்கேயே, இப்பொழுதே உனக்கு மன்னிப்பு இருக்கிறது. ஆண்டவர் உன் பாவங்களை ஒரே நாளில் அழித்துவிடுவதாகக் கூறவில்லை; ஆனால் இப்போதே அவைகளை மறையச்செய்கிறார். பூமியில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதியாக அறிய முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆண்டவருடைய வார்த்தையோ, உண்மையை நமக்கு உறுதியளிக்கிறது!

நமது ஆத்துமாக்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டுமென்று ஆண்டவர் அறிந்திருந்தார்; அதனால்தான், நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நாம் நம்பிக்கை வைத்தவுடன், நம்முடைய நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய பாவங்கள் அனைத்தும், மன்னிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அவர் வாக்களித்திருக்கிறார்!

உன் கடனை இரண்டு முறை செலுத்தித் தீர்க்க வேண்டும் என்று ஆண்டவர் ஒருபோதும் கோருவதில்லை. இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே உனக்காக விலைக்கிரயம் செலுத்திவிட்டார், இந்த உண்மை நித்தியம் வரைக்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

என்னுடன் சேர்ந்து ஜெபித்து, ஆண்டவரின் மன்னிப்பு எனும் வரத்தை இப்போதே பெற்றுக்கொள்ள உன்னை அழைக்கிறேன்… “பரலோகத் தகப்பனே, உமது ஆவியால் என்னை ஆராய்ந்து, என்னில் ஏதேனும் பொல்லாத வழி இருக்கிறதா என்று எனக்குக் காண்பியும். என் பாவங்களை மன்னியும். எல்லா பாவங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்திற்காக நன்றி செலுத்துகிறேன். உமக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும்படி மன்றாடுகிறேன். உம்முடன் சரியான உறவில் இருக்க முழு மனதுடன் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

“பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரய்யா” என்ற இந்தப் பாடலைப் பாடி, உன் பாவங்களை மன்னித்த ஆண்டவரைத் துதித்து மகிழ்வாயாக! https://youtu.be/aBIAEC5pkSU?si=6lPrZCqx9wyxBLa0

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!