உனக்கான ஆண்டவரின் கனவை கண்டறி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கான ஆண்டவரின் கனவை கண்டறி!

நாம் குழந்தைகளாக இருக்கும்போது, எதிர்காலத்தில் உள்ள “நம்மை” பற்றிய நோட்டம் சில நேரங்களில் வேடிக்கையாக இருக்கும். உதாரணமாக, “நான் வளர்ந்தபின், ஒரு விண்வெளி வீரர், ஆய்வாளர், நடன கலைஞராக இருப்பேன்…” என்பது. எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, ​​நான் வளர்ந்தபின் என்னவாக இருக்க விரும்புகிறேன் என்று என் ஆசிரியர் என்னிடம் கேட்டார். நான் சொன்னது, “பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி!” என்று. இது எனது முதல் வகுப்பில் இருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

அப்போதிருந்த என் ஆசையும் நிகழ்கால நிஜமும் வெவ்வேறு! அதுபோலவே, நாம் “நல்ல” கனவுகளைக் காணலாம், ஆனால் அது நம் தந்தையின் சித்தமாக இல்லாமல் இருக்கலாம்.

நீ பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உன்னை படைத்தவர் உனக்காக கனவுகளைக் கொண்டிருந்தார் (வேதாகமம், எபேசியர் 2:10 ஐப் பார்க்கவும்). அவர் அவற்றை உன் மரபணுவில் பின்னினார். உன் வாழ்க்கைக்கான ஆண்டவரின் திட்டத்தை கண்டறிய இன்று உன்னை அழைக்கிறேன். அதைத் தேட நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!

ஆண்டவர் கூறுகிறார், “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” (எரேமியா 33:3).

ஆண்டவர் உனக்கு “எட்டாததுமான பெரிய காரியங்களை” வெளிப்படுத்த விரும்புகிறார். இவை மறைக்கப்பட்ட விஷயங்கள். “என் குழந்தை எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறாள் (பட்டிருக்கிறான்) என்பதை அவனாகவே/அவளாகவே கண்டுபிடிக்க முடிகிறதா என்று நான் பார்க்கப் போகிறேன்” என்று கூறி, பரலோகத்தின் உயரத்திலிருந்து உங்களைப் பார்வையிட வேண்டும் என்பது அவருடைய விருப்பமில்லை.

இல்லை! ஆண்டவர் ஒரு நல்ல தந்தையைப் போல் உன்னுடன் நடக்க விரும்புகிறார். அவர் உன்னுடன் பேசவும், அவர் உன்னிடமிருந்து விரும்புவதை வெளிப்படுத்தவும், உன் வாழ்க்கையில் அவரது உள்ளத்தில் இருக்கும் கனவை வெளிப்படுத்தவும் விரும்புகிறார்.

எனவே, உன் வாழ்க்கைக்கான அவரது கனவை உனக்கு வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடம் நீ கேட்கலாமே?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!