தைரியமாய் துணிந்து கேள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தைரியமாய் துணிந்து கேள்!

“கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.” (வேதாகமத்தில் சங்கீதம் 40:1-3 ஐ வாசிக்கவும்)

ஆண்டவர் உன் தேவைகள் அனைத்திற்காகவும் விசுவாசிக்கும்படி உன்னை அழைக்கிறார். உன் பொருள் தேவைகள் மற்றும் சரீரப் பிரகாரமான தேவைகள் மட்டும் அல்ல, ஆம், உன் இருதயத்தின் எல்லா தேவைகளுக்காகவும்தான்! நீ எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

உன்னை வரவேற்க அவருடைய கரங்கள் எப்போதும் தயாராக இருக்கும்; உன் கண்ணீரைத் துடைக்க அவருடைய கரங்கள் எப்போதும் உன் அருகில் இருக்கும்.

அவர் உறுதியான கன்மலையாய் இருக்கிறார், நீ எப்போதும் நம்பத்தக்கவர். அவர் உன் கால்களைக் கன்மலையின் மீது நிறுத்துகிறார், அவரில் நீ அசைக்கப்பட முடியாத ஒருவராய் இருக்கிறாய்.

ஆண்டவர் உன் வாயிலும் உன் ஆத்துமாவிலும் ஜீவனுக்கான வல்லமையை வைக்கிறார். உன் மறுசீரமைப்பு, உன் சுகம், உன் அற்புதம் ஆகியவற்றிற்கான வழியை அவர் சுத்தம் செய்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!