உன் இருதயம் அவருடைய வசிப்பிடமாகும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் இருதயம் அவருடைய வசிப்பிடமாகும்

“ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்” (வேதாகமத்தில் சங்கீதம் 104:2-5 ஐ வாசிக்கவும்)

அவர் இருந்தவரும், இருக்கிறவரும், என்றென்றும் இருப்பவருமாய் இருக்கிறார்! ஆண்டவர் ஒளியைத் தமக்கு வஸ்திரமாக அணிந்துகொள்கிறார், மற்றும் அவருடைய மாட்சிமையின் பிரகாசம் பிரபஞ்சத்தை மூடுகிறது. சமுத்திரங்களும் கடல்களும் அவருடைய மகிமைப் பிரதாபத்தை அறிவிக்கின்றன. மலைகள் அவருடைய வல்லமைக்கும் மகிமைக்கும் சாட்சியாய் இருக்கின்றன. இவ்வளவு அழகும் வலிமையும் அவருக்குள் தங்கியிருக்கிறது… உன் மீதும் அவ்வளவு அன்பு இருக்கிறது.

நண்பனே/தோழியே, ஆண்டவர் உன்னைச் சூழ்ந்திருக்கிறார். மனுஷர்களுக்கோ அல்லது சூழ்நிலைகளுக்கோ பயப்படாதே – ஆண்டவர் உன் அருகில் இருக்கிறார். பயத்தை உனக்குள் அனுமதிக்காதே. உன் இருதயம் பயம் குடிகொள்வதற்கான வீடு அல்ல… உன் இருதயம் சந்தேகம் மற்றும் உறுதியற்ற தன்மைக்கான இடம் அல்ல. உன் இருதயம் பரிசுத்த ஆவியானவரின் பாக்கியம் பெற்ற வாசஸ்தலமாகும்! தேவ ஆவியானவர் உன்னில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டார்.

நீங்கள் வலிமையானவர், தைரியமானவர், உறுதியானவர், இயற்கைக்கு அப்பாற்பட்ட, தெய்வீக சமாதானத்தால் நிரப்பப்பட்டவர்!

ஆண்டவர் உன் இருதயத்தை தம்முடைய வாசஸ்தலமாக்குகிறார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!